வீடொன்றினுள் மோசமான செயலில் ஈடுபட்ட இரு தம்பதிகள் கைது!

விற்பனை ஊக்குவிப்பு அதிகாரி ஒருவரை வீடொன்றிற்குள் அழைத்துச் சென்று தாக்கிவிட்டு அவரின் பொருட்களை கொள்ளையிட்ட இரு தம்பதிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் ஹொரண – மில்லனிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்டவரின் நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியன கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதோடு குறித்த தம்பதிகள் திருடிய மோட்டார் சைக்கிளை விற்பனை செய்து அப் பணத்தில் சுற்றுலா சென்று திரும்பியமை விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மில்லனிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.